சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் உடல் நிலை கோளாறால் உயிர்நீத்தார்

கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் உடல் நிலை கோளாறால் உயிர்நீத்தார்

கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும், கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் 4 மாத காலமாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

அகர்வால் ஜூன் 22 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். போராட்டம் 100 நாட்களை தாண்டிய நிலையில், நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இதையடுத்து அவர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

நதிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய ஜிடி அகர்வால், கான்பூர் ஐஐடி பேராசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version