டெல்லியில் தேசியவாத காங். கட்சித் தலைவர் சரத்பவாருடன் ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து, சென்னையில் நடைபெறும் அண்ணா மற்றும் கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டெல்லியில் நாளை துவங்கவுள்ளது. இதை முன்னிட்டு மத்திய பாஜக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை இன்று கூட்டியது. இதேபோல எதிர்கட்சிகள் சார்பில் இன்று பிற்பகலில் அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், திமுக சார்பில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்து, வரும் 16ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடைபெறவுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைதிறப்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை வழங்கினார்.

இதையடுத்து டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை மக்களவை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version