அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெற்றிபெற பாடுபட வேண்டும்: அமைச்சர் சேவூர் ராமசந்திரன்

திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தமிழகத்திலேயே அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் கடுமையாக பாடுபட வேண்டும் என்று அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம் பகுதிகளுக்கான அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் காஞ்சிப் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சேவூர் ராமசந்திரன், அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை அறிமுகம் செய்து வைத்து தோழமை கட்சிகளிடம் வாக்கு சேகரித்தார்.

கூட்டத்தில் பேசிய அவர், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியை தமிழகத்திலேயே அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் கடுமையாக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Exit mobile version