அதிமுக அரசை குறைச் சொல்ல செந்தில்பாலாஜிக்கு அருகதை இல்லை

வெறும் அரசாணையை மட்டும் வெளியிட்டு ஆட்சி செய்த திமுகவில் இருக்கும் செந்தில்பாலாஜி, அதிமுக அரசை குறைக் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

கரூர் மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பெரியகுளத்துப்பாளையம் குகைவழிப்பாதை திறப்பு விழா நடைபெற்றது. இதில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, குகை வழிப்பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், குறை சொல்வதை மட்டுமே வாடிக்கையாக கொண்ட செந்தில் பாலாஜி, கட்சி விட்டு கட்சி தாவியதைத் தவிர, மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை என்றார். பல குற்றங்களுக்கு சொந்தக்காரரான செந்தில்பாலாஜி, அதிமுக ஆட்சியை குறைக் கூற அருகதை இல்லை என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை அதிமுக அரசு வழங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version