News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு விவரங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!

Web Team by Web Team
June 12, 2020
in Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு விவரங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை, பள்ளிகள் இன்று மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க, பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20 சதவீதமும் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதினொன்றாம் வகுப்பு தேர்வுகளை எழுத இருந்த மாணவர்களின் வருகைப்பதிவேடுகளும் பிப்ரவரி 29 ஆம் தேதி வரை முழுமையாக இருக்கிறதா என்பதை சரிபார்த்த பின் பதிவேடுகளை இன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வருகைப் பதிவேட்டின் கடைசிப் பக்கத்தில் தலைமை ஆசிரியரோ அல்லது முதல்வரோ கையொப்பமிட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதனை பெற்றுக் கொள்ளும் மாவட்ட கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் அல்லது பள்ளி துணை ஆய்வாளர் வருகைப்பதிவேட்டில் கடைசிப் பக்கத்தில் கையொப்பமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கான நேரத்தினை அந்தந்த பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், ஒப்படைக்கப்பட்ட வருகை பதிவுகள் முத்திரையிட்டு தனி அறையில் மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையினை இன்று மாலை 5 மணிக்குள் பள்ளிக்கல்வி இயக்குனர் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: 10th&11thGradeDPInewsjtamil nadu
Previous Post

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் நீர் திறப்பு!

Next Post

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version