மோடி, அமித்ஷா மீதான புகார் தொடர்பாக வரும் 6-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்

தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது வரும் திங்கட்கிழமைக்குள் முடிவை அறிவிக்க கோரி, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக பிரதமர் மோடி, அமித்ஷா மீது காங்கிரஸ் கட்சியினர் 9 புகார்களை அளித்து இருந்தனர். இதுகுறித்து விசாரணை டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது வந்த தேர்தல் விதிமீறல் புகார் குறித்து, வரும் மே 6 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Exit mobile version