News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நிறைவடைந்தது எஸ்.பி.பி.யின் உடல் அடக்கம் – 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!

Web Team by Web Team
September 26, 2020
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
நிறைவடைந்தது எஸ்.பி.பி.யின் உடல் அடக்கம் – 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!
Share on FacebookShare on Twitter

சென்னை தனியார் மருத்துவமனையில் 51 நாள்கள் சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் சற்று முன் சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

image

பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தந்தைக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர், தமிழ்நாடு அரசின் சார்பாக, காவல்துறையினர், 72 குண்டுகளை வெடித்து முழங்கி, அரச மரியாதையைச் செலுத்தினர். மேற்கொண்டும், புதைக்குழிக்குள் எஸ்.பி.பி.யின் உடல் இறக்கப்பட்டு, கடைசிக்கட்ட இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. பிடிமண்ணும், மலர்களும், இடப்பட்டு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

 image

51 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். அரசுத் தலைவர்கள், அரசியல், திரையுலக பிரமுகர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பிரபலங்களும், எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

நேற்று மாலை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல், செங்குன்றம் அருகேயுள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள, அவரது பண்ணை இல்லத்திற்கு, நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட போது, வழி நெடுகிலும் கூடியிருந்த அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

 image

பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த முன்னதாக அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அந்த பகுதி மக்கள் மற்றும் ரசிகர்களின் கட்டுக்கடங்காத உணர்வுமயத்தால், பாதுகாப்பான முறையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால், நூற்றுக்கணக்கானோர் தாமரைப்பாக்கத்தில், எஸ்.பி.பி,க்கு நேரில் அஞ்சலி செலுத்த முடிந்தது.

Tags: BalasubrahmanyamnewsjSPB
Previous Post

`யாரிடமும் கடிந்து பேசாதவர்’ – எஸ்.பி.பி. குறித்து ரமேஷ்கண்ணா, இசை விமர்சகர் ஷாஜி!

Next Post

திருநள்ளாறு – 10 ஆயிரம் பக்தர்கள் திரண்டனர்

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
திருநள்ளாறு – 10 ஆயிரம் பக்தர்கள் திரண்டனர்

திருநள்ளாறு - 10 ஆயிரம் பக்தர்கள் திரண்டனர்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version