தர்ஷன் அம்மாவை நெகிழ வைத்த சாண்டி..

இன்று பிக்பாஸ் வீட்டின் 81வது நாள்.தினம் தினம் விருந்தாளிகள் வரும் வீடாக மாறியது பிக்பாஸ் வீடு.நேற்று லாஸ்லியாவின் அம்மா, அப்பா, 2 தங்கைகள் அனைவரும் வீட்டிற்கு வந்தனர்.பிக்பாஸ் 2 சீசனில் ஐஸ்வர்யா துத்தாவின் அம்மா வந்த போது அவர் கதறி அழுததை போலவே, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியா கதறி அழுதார்.லாஸ்லியா அழுக, கவின் அழுக இப்படி நேற்று முழுவதுமே ஒரே சோகத்தில் முடிந்தது.

இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் தர்ஷனின் அம்மா மற்றும் அவரின் தங்கை வரவுள்ளனர்.எல்லாரும் freeze என சொல்லிட்டு, ’காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொடும் தேவதை அம்மா’ என்ற பாடல் ஒலிபரப்படுகிறது.அப்பொழுது தர்ஷனின் அம்மா உள்ளே வர, தர்ஷனோ ஓடிச்சென்று கட்டி தழுவுகிறார்.பின்பு தர்ஷன் அம்மாவிற்கு சாண்டி happy birthday சொல்லிகிறார்.தர்ஷன் அம்மாவோ யாருக்கு என கேட்டு, பின்பு தனக்குதான் என்று உணர்ந்துக்கொண்டு நெகிழ்ந்து போக, அனைவரும் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர்.சோகத்தில் இருந்த பிக்பாஸ் வீடு இன்று ஜாலியாக மாறியுள்ளது.

 

Exit mobile version