வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி

சென்னை அம்பத்தூரில் முகநூல் பழக்கத்தின் மூலம் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி 4 பேரிடம் சுமார் 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் உள்ள வெங்கடபுரத்தை சேர்ந்த ஹரிஸ்குமார், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு மாதம் முன்பு ராஜமாணிக்கம் என்பவருடன் முகநூலின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக ஹரிஸ்குமார் கூறியதை நம்பி தனது 3 நண்பர்களை ஒன்றிணைத்து 40 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஒரு மாதமாகியும், வேலை வாங்கி தராமலும், பணத்தையும் திரும்ப தராமலும் இருந்ததையடுத்து, சந்தேகமடைந்த ராஜமாணிக்கம் காவல் நிலையத்தில் ஹரிஸ்குமார் மீது புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஹரிஸ்குமார் இதேபோல் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து ஹரிஸ்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version