உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.2.11 கோடி பறிமுதல்

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் கைப்பற்றப்பட்ட 2 கோடியே 11 லட்சம் ரூபாய் உரிய ஆவணங்கள் காட்டப்பட்டதையடுத்து திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் பறக்கும்படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்படும் பொருட்கள், பணம் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பெரம்பூர் எம்கேபி நகரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை சோதனை நடத்தப்பட்டது. இரண்டு தனியார் வங்கி ஏ.டி.எம்களுக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 11 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அங்கு வந்த தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள் உரிய ஆவணங்களை காட்டியதால் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.

Exit mobile version