நில மோசடி வழக்கு: அமலாக்கத் துறை முன்பு ராபர்ட் வதேரா, அவரது தாயார் ஆஜர்

நில முறைகேடு வழக்கு தொடர்பாக, ராபர்ட் வதேரா மற்றும் அவரது தாயார் அமலாக்கத் துறையினர் முன் ஆஜராகினர்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், ராஜஸ்தானின் பிகானோர் பகுதியில், பல ஏக்கர் நிலத்தை மிக குறைந்த விலைக்கு வாங்கியதாக குற்றச்சாற்று எழுந்தது. இதையடுத்து, சட்ட விரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நேரில் ஆஜராக ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, ராபர்ட் வதேரா மற்றும் அவரது தாயார் மவுரீன் வதேரா அகியோர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

Exit mobile version