தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் 9.2 டி.எம்.சி திறக்க கோரிக்கை

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 9 புள்ளி 2 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட கர்நாடாகவிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்திற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய 9 புள்ளி 2 டிஎம்சி தன்ணீர் வரும் 1 ஆம் தேதி முதல் திறந்து விட தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதில் காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களை இக்கூட்டத்தில் சமர்பித்தனர். இந்த நிலையில், வரும் 28ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version