புதுச்சேரி வெங்கட்டா நகரில் மறுவாக்குப்பதிவு தொடக்கம்

புதுச்சேரி வெங்கட்டா நகரில் மறு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் காமராஜர் நகர் வெங்கட்டா நகர் மின்கட்டண வசூல் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவை விவிபேட் இயந்திரத்தில் இருந்து அகற்றாமல் வாக்குப்பதிவு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மக்கள் வாக்களிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மறுவாக்குப்பதிவையொட்டி, இந்த மையத்தில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரி காவல்துறையின் கிழக்கு சரகத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version