தமிழக, ஆந்திர எல்லையில் 3,400 லிட்டர் எரிசாராய ஊறல் அழிப்பு

வாணியம்பாடி அருகே தமிழக, ஆந்திர எல்லைப் பகுதியில் மதுவிலக்கு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 3 ஆயிரத்து 400 லிட்டர் எரிசாராய ஊறலை அழித்தனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தமிழக, ஆந்திர எல்லைப் பகுதியான கோரிபள்ளம் வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட கண்காணிப்பாளருக்கு கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்க பிரிவு மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலான 8 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள மலைப்பகுதியில் 3 ஆயிரத்து 400 லிட்டர் சாராய ஊறலை கண்டறிந்து அழித்தனர். அங்கிருந்து தப்பியோடிய கள்ளசாராயம் காய்ச்சும் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version