News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்!

Web team by Web team
February 4, 2023
in அரசியல்
Reading Time: 1 min read
0
உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்!
Share on FacebookShare on Twitter

கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியா அரசுக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்களும், ஊடு பயிராக பயிரிடப்பட்டிருந்த உளுந்து போன்ற பயிர்களும் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உடனடியாக அதிகாரிகளை அனுப்பி, மழைநீரில் அழுகிய, பயிர்களை கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

ஏக்கருக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், மழையால் நனைந்து பாதிக்கப்பட்ட நெல்மணிகளை உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ள எதிர்க்கட்சித்தலைவர், மழையில் நனைந்த நெல்லின் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். விடியா அரசு பொறுப்பேற்ற பின், கடந்த 2021 மற்றும் 2022 பருவமழை காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதை சுட்டுக்காட்டி உள்ள அவர், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான தார்ப்பாயினை இந்த விடியா அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு நிதி வர வேண்டும், காப்பீட்டுத் திட்டம் மூலம் நிதி வழங்கப்படும் என்றெல்லாம் தாமதப்படுத்தாமல், அதிமுக ஆட்சியின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக மாநில நிதியில் இருந்து நிதியை விடுவித்தது போல், இந்த விடியா அரசும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மழைக்காலங்களில் சரியாக கணக்கெடுக்காமல் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதையும், நிவாரணம் வழங்கியதில் பல்வேறு தவறுகள் நடைபெற்றதையும், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நிவாரணம் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதையும், சுட்டிக்காட்டியபோதெல்லாம், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாததுபோல் இந்த விடியா அரசும், அதன் முதலமைச்சரும், அமைச்சர்களும் தனக்கு பதில் அளிப்பதையே கடமையாகக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சித்தலைவர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் மழையால் மீனவர்களும், உப்பளத் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு தேவையான உதவிகளை விடியா திமுக அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags: EPSimmediatelyprovidedreliefto vidya arasu
Previous Post

கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்!

Next Post

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் !

Related Posts

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க பொதுச்செயலாளர் அறிக்கை!
அரசியல்

கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க பொதுச்செயலாளர் அறிக்கை!

September 9, 2023
அதிமுகவில் இருந்து இருவர் நீக்கம்! – பொதுச்செயலாளர் அதிரடி!
அரசியல்

அதிமுகவில் இருந்து இருவர் நீக்கம்! – பொதுச்செயலாளர் அதிரடி!

September 4, 2023
காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பற்ற துப்பு இல்லை – எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!
அரசியல்

காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பற்ற துப்பு இல்லை – எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!

September 4, 2023
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தாள் விழாவினை ஒட்டி, பொதுச்செயலாளர் அறிக்கை!
அரசியல்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தாள் விழாவினை ஒட்டி, பொதுச்செயலாளர் அறிக்கை!

September 2, 2023
தமிழகமே..தமிழகமே.. சரித்திரம் படைக்க வா! அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு ஏற்பாடுகள்! ஒரு சிறப்புப் பார்வை!
அரசியல்

தமிழகமே..தமிழகமே.. சரித்திரம் படைக்க வா! அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு ஏற்பாடுகள்! ஒரு சிறப்புப் பார்வை!

August 19, 2023
Next Post
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் !

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் !

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version