திமுகவிற்காக இரத்தம் சிந்தியவர்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டனர்: அன்புமணி

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு வாக்கு சேகரித்தனர்.

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், அரசியல் தெரியாதவர் உதயநிதி ஸ்டாலின் என்று விமர்சித்தார். திமுகவில் ரத்தம் சிந்தியவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டு விட்டனர் என்றும், திமுகவில் உங்கள் குடும்பத்தை தவிர யாரும் இல்லையா? என உதயநிதி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.

Exit mobile version