News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பாதுகாப்பு படை கப்பலை குடும்பத்திற்காக ராஜீவ் பயன்படுத்தினார் : மோடி குற்றச்சாட்டு

Web Team by Web Team
May 10, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
பாதுகாப்பு படை கப்பலை குடும்பத்திற்காக ராஜீவ் பயன்படுத்தினார் : மோடி குற்றச்சாட்டு
Share on FacebookShare on Twitter

பாதுகாப்புப் படையின் கப்பலை தனது குடும்பத்தின் டாக்ஸியாகப் பயன்படுத்தினார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி என்று பிரதமர் மோடி முன்வைத்த குற்றச்சாட்டை, அக்கப்பலில் பணியாற்றிய ஒருவரே உண்மை என்று ஏற்றுக் கொண்டுள்ளது, காங்கிரஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பெருமையான ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலை அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தனது குடும்பத்தின் சொந்த டாக்ஸி போல பயன்படுத்தினார் என்றும், அச்சமயத்தில் நாட்டின் கடல்சார் எல்லைப் பகுதிகளை பாதுகாத்துக் கொண்டிருந்த ஐ.என்.எஸ் விராட் கப்பல் ஒரு குடும்பத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதால் நாட்டின் பாதுகாப்பே கேள்விக்கு உள்ளானதாகவும் கூறினார்.

முதலில் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் ஆதாரப் பூர்வமற்றது என்று மறுத்தது. ஆனால் 1988ஆம் ஆண்டின் ஜனவரி 31ஆம் தேதியில் வெளியான இந்தியா டுடே ஆங்கிலப் பத்திரிகையின் ஒரு கட்டுரையில், மூத்த செய்தியாளர் அனிதா பிரதாப் இது குறித்து புகைப்படங்களோடு விளக்கி இருப்பது இணையத்தில் வெளியாகி வைரலானது.

அந்தக் கட்டுரையில் 1987ஆம் ஆண்டு டிசம்பரில் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரியங்காவின் 4 நண்பர்கள், சோனியா காந்தியின் சகோதரி, அம்மா மற்றும் மாமா, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் – உள்ளிட்ட பலரும் லட்சத்தீவிற்கு சுற்றுலா சென்றதும், அங்கு அவர்கள் தங்கள் பயன்பாட்டுக்கு ஐ.என்.எஸ்.விராட் கப்பலைப் பயன்படுத்தியதும் குறிப்பிடப்பட்டு உள்ளது. தவிர இவர்களின் பாதுகாப்புக்காக அரசின் நீர்மூழ்கிக் கப்பல்களும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையால் காங்கிரசின் குட்டு வெளிப்பட்டது. இருந்தாலும் அந்த செய்தி பொய்யானது என்றே காங்கிரஸ் தரப்பு மறுத்து வந்தது. இந்நிலையில் ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி பிரஃபுல்லா குமார் பத்ரா டுவிட்டரில், ’பிரதமர் மோடி சொன்னது அத்தனையும் உண்மை. அதற்கு நானே கண்ணால் பார்த்த சாட்சி’ – என தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் தரப்பின் நெருக்கடியை இன்னும் அதிகரித்து உள்ளது.

இதனால், ‘அரசுப் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமரை சுற்றுலா செல்வதாக விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர், சுற்றுலாவுக்கு இந்தியப் பாதுகாப்புத்துறையின் கப்பலைப் பயன்படுத்தி உள்ளது சரியா?’ – என்று மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் காட்டமாகக் கேட்கத் தொடங்கி உள்ளனர்.

Tags: newsjnewsjtamilராஜீவ் காந்தி
Previous Post

அயோத்தி வழக்கு: சமரச குழுவிற்கு கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

Next Post

வியட்நாமில் இந்திய குடியரசு துணை தலைவர் சுற்றுப்பயணம்

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
வியட்நாமில் இந்திய குடியரசு துணை தலைவர் சுற்றுப்பயணம்

வியட்நாமில் இந்திய குடியரசு துணை தலைவர் சுற்றுப்பயணம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version