News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ராஜீவ் காந்தி கொலை வழக்கும் நளினியும் -காலக்கோடு

Web Team by Web Team
July 20, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
ராஜீவ் காந்தி கொலை வழக்கும் நளினியும் -காலக்கோடு
Share on FacebookShare on Twitter

1991 மே 21: தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீ பெரும்புதூருக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு வெடிப்பின் மூலம் கொல்லப்பட்டார்.

1991 ஜூன் 11: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார்.

1991 ஜூன் 14: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினியும் ஸ்ரீகரன் என்ற முருகனும் கைது செய்யப்பட்டனர்.

1991 ஜூலை 22: சுதேந்திரராஜா என்ற சாந்தன் கைதுசெய்யப்பட்டார். இப்படியாக மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

1998 ஜனவரி 28: ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடைய 26 பேருக்கும் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுகள் செய்யப்பட்டன.

1999 மே 11: சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனை மட்டும் உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற 19 பேரும் தண்டனைக் காலத்தை விசாரணைக் கைதியாகவே கடந்ததால் விடுவிக்கப்பட்டனர். 

1999 அக்டோபர் 8: தங்கள் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென்று, நால்வரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

1999 அக்டோபர் 10: மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

1999 அக்டோபர் 29:  இந்தக் கருணை மனுக்களை அன்றைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி தள்ளுபடி செய்தார். ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகக் கூறி நால்வரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

1999 நவம்பர் 25: ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமெனக் கூறியது.

2000 ஏப்ரல் 19: இந்த விவகாரம் குறித்து அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாககக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

2000 ஏப்ரல் 24: தமிழக அரசின்  அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

2000 ஏப்ரல் 26: நால்வரில் மீதமிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். குடியரசுத் தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்தனர்.

2006 செப்டம்பர் 14: பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதாக கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. ஆனால் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோருக்கு இந்த அரசாணை மூலம் விடுதலை கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து நளினி நீதிமன்றத்தை நாடினார்.

2008 செப்டம்பர் 24: விடுதலை தொடர்பான நளினியின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் மேல் முறையீட்டிலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2007: புதிய குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் பதவி ஏற்ற நிலையில், மூவரின் கருணை மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

2011 ஆகஸ்ட் 12: கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யபப்பட்டதாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அறிவித்தார். செப்டம்பர் மாதத்தில் அவர்கள் தூக்கிலிடப்படலாம் என செய்திகள் வெளியாயின.

2011 ஆகஸ்ட்: தங்களுடைய கருணை மனுக்கள் கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டதால் தாங்கள் தினமும் துன்பத்தை அனுபவித்ததாகவும் அதனால், தங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்குத் தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

2014 பிப்ரவரி 18: மூவரது கருணை மனுக்களும்  பல ஆண்டு காலம் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்துசெய்யப்படுவதாக நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதனால் ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஆயுள் தண்டனைக் கைதிகளானார்கள்.

2014 பிப்ரவரி 19: அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார். வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்திருந்த காரணத்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால் மத்திய அரசுக்கு இதைத் தெரியப்படுத்துவதாகவும், மூன்று நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

2014 பிப்ரவரி: காங்கிரஸ் தலைமையிலான, திமுக அங்கம் வகித்த அன்றைய மத்திய அரசு தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது. 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க தடையாணையும் பெறப்பட்டது. சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது மத்திய காங்கிரஸ் அரசு கூறியது.

2014 ஏப்ரல் 25: மத்திய – மாநில அரசின் அதிகாரங்கள் தொடர்புடைய  விவகாரங்கள் இந்த வழக்கில் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

2015 டிசம்பர் 2: மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. ஆனால், 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையெனக் கூறியது. இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் வழக்கைத் தீர்மானிக்க, மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

2016 பிப்ரவரி 24: நளினியின் தந்தை சங்கரநாராயணின் மறைவை அடுத்து, அந்த இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு 12 மணிநேர பரோல் வழங்கப்பட்டது.

2016 மார்ச் 2: 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது தமிழக அரசு.

2018 செப்டம்பர் 6: அரசியல் சாஸனத்தில் 161வது பிரிவின் கீழ் 7 பேரையும் விடுவிப்பது குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.

2019 மே 9: எழுவர் விடுதலையை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிட்டது.

2019 ஜூன் 03: எழுவர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன? – என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியது. தீர்மானம் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதன் நிலை குறித்து தெரிவிக்க 2 வார அவகாசம் வேண்டும் என்றும் கோரியது.

2019 ஜூலை 05: மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்ட நளினிக்கு, தமிழக சிறைத்துறையின் அனுமதியோடு ஒரு மாத பரோல் கொடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தோடு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி எதுவும் அளிக்க கூடாது, 24 மணி நேரமும் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், 30 நாட்களுக்குப் பின் சரண்டர் ஆக வேண்டும் என்றும் நளினிக்கு உத்தரவிடப்பட்டது. அந்த பரோலை நளினி தக்க சமயத்தில் பயன்படுத்த காத்திருந்தார்.

Tags: nalinirajivGandhi murder case
Previous Post

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் “நேர்கொண்ட பார்வை”யின் தீம் பாடல்

Next Post

விரல்நுனி ஸ்கேனர் வசதியுடன் அறிமுகமாகும் ஓப்போ K3 3.0 வெர்ஷன்

Related Posts

”30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினி”க்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு
Top10

”30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினி”க்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு

December 23, 2021
வேலூர் சிறையில் நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்!
TopNews

வேலூர் சிறையில் நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்!

July 21, 2020
ராஜிவ் கொலை வழக்கு  : நளினியின் பரோல்  3 வாரங்கள் நீட்டிப்பு
செய்திகள்

ராஜிவ் கொலை வழக்கு : நளினியின் பரோல் 3 வாரங்கள் நீட்டிப்பு

August 22, 2019
வேலூர் மத்திய சிறையில் உள்ள தனது கணவரை சந்தித்த நளினி
செய்திகள்

வேலூர் மத்திய சிறையில் உள்ள தனது கணவரை சந்தித்த நளினி

August 13, 2019
ஒரு மாத பரோலில் இன்று வெளியே வருகிறார் நளினி
TopNews

ஒரு மாத பரோலில் இன்று வெளியே வருகிறார் நளினி

July 25, 2019
Next Post
விரல்நுனி ஸ்கேனர் வசதியுடன் அறிமுகமாகும் ஓப்போ K3 3.0 வெர்ஷன்

விரல்நுனி ஸ்கேனர் வசதியுடன் அறிமுகமாகும் ஓப்போ K3 3.0 வெர்ஷன்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version