அமேதி தொகுதியில் ராகுல்காந்தி இன்று வேட்பு மனுத்தாக்கல்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி மக்களவை தொகுதியில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நாளை முதல் அடுத்த மாதம் 19ம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் அமேதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

அமேதியில் கடந்த 2004ல் இருந்து தொடர்ந்து மூன்று முறை ராகுல்காந்தி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறையும் அவர் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். வயநாட்டில் கடந்த வாரத்தில் தனது வேட்பு மனுவை ராகுல்காந்தி தாக்கல் செய்தார். இதையடுத்து, அமேதியில் அவர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

ராகுலுடன் பிரியங்கா மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் உடன் செல்கின்றனர். வேட்பு மனு தாக்கலுக்கு முன்பு பேரணியாக சென்று பொதுமக்களை சந்திக்கவும் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். 

Exit mobile version