புதுக்கோட்டை மாவட்டம் வளர்ந்த நகரங்களுக்கு இணையாக திகழ்கிறது

தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களால் புதுக்கோட்டை மாவட்டம் வளர்ந்த நகரங்களுக்கு இணையாக திகழ்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக தமிழக அரசு சார்பில் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டது. இதற்கான பணிகள் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து, இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்டை வசதிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் பழனிசாமி பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். கூட்டுக்குடிநீர் திட்டம், அரசு மருத்துவக் கல்லூரி போன்ற பல்வேறு திட்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Exit mobile version