விசைத்தறி தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும்: அமைச்சர்கள்

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வருகின்ற 19 ஆம் தேதி சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

விசைத்தறி கூடங்களுக்கு நேரடியாக சென்று உரிமையாளர்களையும் தொழிலாளர்களையும் சந்தித்த அமைச்சர்கள் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தனர். பிரசாரத்தின் போது, அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர் கந்தசாமிக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version