விசைத்தறி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

விருதுநகர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

ராஜபாளையம் அடுத்த சத்திரப்படியில் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பல முறை பேச்சுவார்தை நடைபெற்று தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து நேற்று வட்டாச்சியர் தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

Exit mobile version