News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

Web Team by Web Team
May 1, 2021
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
Share on FacebookShare on Twitter

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை ஆணையம் ஏற்கெனவே விதித்துள்ளதாகவும் அதன் தொடர்ச்சியாக மேலும் சில கட்டுப்பாடுகளை வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுளளதாகவும் கூறியுள்ளார். அதன் விவரம்:

  • ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரிதான் பொறுப்பு. அவருக்கு தேவையான உதவியை சுகாதார அதிகாரி வழங்க வேண்டும்.
  • கொரோனா வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழை சம்பந்தப்பட்ட நபர்கள் சுகாதார அதிகாரிகளிடம் இருந்து பெற வேண்டும்.
  • எந்தவொரு வேட்பாளரோ, முகவரோ ஆர்டிபிசிஆர் பரிசோதனை அல்லது ஆர்ஏடி பரிசோதனை அல்லது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி பெறாமலோ வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வரக்கூடாது. அவர்கள். வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்குள்ளாக கோவிட் நெகட்டிவ் என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கான பரிசோதனைகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வரும் வாக்கு எண்ணும் முகவர்கள் யார் என்ற பட்டியல், தேர்தல் அலுவலரிடம் வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று நாட்களுக்கு முன்பே அளிக்கப்பட வேண்டும்.
  • வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே பொதுமக்கள் திரள அனுமதியில்லை.
  • வாக்கு எண்ணிக்கை நடக்கும் அரங்கில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும், சரியான காற்றோட்ட வசதி இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  • வாக்கு எண்ணிக்கைக்கு முன்பும் பின்பும் அந்த மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • சீலிடப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்களித்ததை உறுதிப்படுத்தும் சரிபார்ப்புச்சீட்டை காண்பக்கும் இயந்திரத்தின் வெளிப்பகுதியை கிருமிநாசினி மூலம் சுத்திகரிப்பு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்குப்பதிவுக்காக 3-4 அரங்குகளும் அதில் கூடுதல் தேர்தல் உதவி அலுவலர்களும் பணியில் இருக்க வேண்டும்.
  • அரங்கிற்குள் நுழையும் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சானிடைசர், சோப்பு, தண்ணீர் போன்றவை ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அரங்குக்குள் நுழையும் நபர்கள் ஒவ்வொருவரும் கை சுத்திகரிப்பான்கள் மூலம் சுத்தமாக கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளி உள்பட பிற அறிகுறிகள் இருந்தாலும் அவர் வாக்கு எண்ணும் அரங்குக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்.
  • ஒருவேளை தாம் முன்மொழிந்த முகவருக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தால், மாற்று முகவரை வேட்பாளர் நியமிக்கலாம்.
  • வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் இடையே சமூக இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோருக்கு பிபிஇ கவச உடை போதுமான அளவில் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இரண்டு வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு ஒரு ஏஜென்ட் பிபிஇ ஆடை அணிந்திருக்கும் வகையில் அந்த அறையில் இருக்கை அமர்வு வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முக கவசம், சானிடைசர், முகத்தை மறைக்கும் ஷீல்டு, கையுறைகள் போன்றவை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
  • தபால் வாக்கு எண்ணிக்கை பணிக்காக கூடுதலாக தேர்தல் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் தனி அறையில் தபால் வாக்குகள் எண்ணும் பணியை தேர்தல் அலுவலர் அல்லது உதவி தேர்தல் அலுவலர் மேற்பார்வையில் கண்காணிக்கலாம்.
  • அரசு வழிகாட்டுதல்களின்படி பயன்படுத்தப்பட்ட கோவிட் தொடர்புடைய கழிவுகளான முக கவசம், முகத்தை மறைக்கும் ஷீல்டு, பிபிஇ கிட்டுகள், கையுறைகள் போன்றவற்றை வீசுவதற்கு சரியான வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • வாக்கு எண்ணும் அறைக்கு உள்ளேயும் வெளியேயும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.
  • தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மே 2ஆம் தேதி எந்தவொரு வெற்றிக் கொண்டாட்டத்துக்கும் அனுமதி கிடையாது. வெற்றி பெறும் வேட்பாளருடன் இரண்டு பேருக்கு மேல் வெற்றிச் சான்றிதழ் பெற வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவுகள் 51 முதல் 60வரையும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 188 மற்றும் பிற சட்டப்பிரிவுகள் மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அந்தந்த மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் உள்ளூர் சூழல்களுக்கு தக்கபடி கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். இதற்காக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து மூன்றடுக்கு திட்டத்தை தேர்தல் அதிகாரிகள் தயாரித்து வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • இந்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான விவரத்தை அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், முகவர்களின் கவனத்துக்கு உடனடியாக தேர்தல் அதிகாரிகள் கொண்டு செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Tags: countingelection result
Previous Post

"தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் "- சுகாதாரத்துறை

Next Post

புதிய கட்டுப்பாடுகளால் ஆன்லைனில் சூடு பிடிக்கும் இறைச்சி விற்பனை

Related Posts

திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியைத் தக்க வைக்கிறது பாஜக!
அரசியல்

திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியைத் தக்க வைக்கிறது பாஜக!

March 2, 2023
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…
TopNews

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

October 12, 2021
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி நிலவரங்கள்
TopNews

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி நிலவரங்கள்

May 3, 2021
பேராவூரணியில் எந்திரம் கோளாறு: முடிவு அறிவிப்பதில் தாமதம்
TopNews

பேராவூரணியில் எந்திரம் கோளாறு: முடிவு அறிவிப்பதில் தாமதம்

May 2, 2021
வாக்கு எண்ணிக்கை: முகவர்களுக்கு சோதனை முகாம்கள் அமைப்பு
TopNews

வாக்கு எண்ணிக்கை: முகவர்களுக்கு சோதனை முகாம்கள் அமைப்பு

April 28, 2021
8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை; மேஜைகளில் மாற்றமில்லை: தேர்தல் ஆணையர் சொன்னது என்ன?
TopNews

8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை; மேஜைகளில் மாற்றமில்லை: தேர்தல் ஆணையர் சொன்னது என்ன?

April 23, 2021
Next Post
புதிய கட்டுப்பாடுகளால் ஆன்லைனில் சூடு பிடிக்கும் இறைச்சி விற்பனை

புதிய கட்டுப்பாடுகளால் ஆன்லைனில் சூடு பிடிக்கும் இறைச்சி விற்பனை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version