மத்திய அரசின் திட்டங்களை தமிழக மக்களிடம் விளக்கி சொல்ல வேண்டும் என தமிழக பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இருந்தவாறு காணொலி மூலம் பிரதமர் மோடி நாமக்கல், சேலம், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் பேசினார்.
நாமக்கல் கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். உரையாடலின் போது, நாடாளுமன்ற தேர்தல் வியூகம் பற்றி நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
நிர்வாகிகளும் தங்களது கருத்துக்களை மோடியிடம் கூறினார். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மூவாயிரம் கிராம சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக பாஜகவினரை வலியுறுத்தினார்.
Discussion about this post