வரும் 27ம் தேதி முதல் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வரும் 27ம் தேதி முதல் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிகவிற்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர் மற்றும் திருச்சி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 27ம் தேதி மாலை முதல் தேமுதிக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து வாக்குசேகரிப்பை பிரேமலதா துவங்குகிறார். வரும் ஏப்ரல் 16ம் தேதி வரை தனது தேர்தல் பிரசார பயணத்தை பிரேமலதா மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version