திருவாரூரில் குடிமராமத்து பணிகள் மூலம் குளங்கள் புனரமைப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிமாரமத்துப் பணிகள் மூலம் நீராதாரங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

திருவாரூர் மாவட்ட குடிமாரமத்து பணிகளுக்காக நீர்வள ஆதார துறை சார்பில் 15 கோடியே 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நன்னிலத்தை சுற்றியுள்ள இரட்டை குளம், சோத்தகுடி பெருமாள் கோயில்குளம், மூலங்குடி உள்ளிட்ட பகுதிகளில், குளம் ஏரி உள்ளிட்ட நீராதாரங்களை தூர்வாரியதுடன், குளங்களில் இருந்து எடுக்கும் மண்ணை வயல்வெளிகளில் கொட்டி வருகின்றனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கும் விவசாயிகள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version