அரபிக்கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை: பொள்ளாச்சி ஜெயராமன்

அரபிக்கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க 6 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி அருகேயுள்ள கோரையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், கோரையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டதன் மூலம் மழைக் காலங்களில் வீணாக அரபிக்கடலில் கலக்கும் தண்ணீர் சேமிக்கப்படும் என்று கூறினார்.

இதேபோன்று, 6 தடுப்பணைகள் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த அவர், 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள தேவம்பாடி வலசு குளம் தூர் வாரப்பட்டு மதகுகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version