ஒவ்வொருவரின் தலையும் கோழி முட்டை மாதிரி தான்: காவலர்

இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியமால் வரும் நபர்களுக்கு நூதன முறையில் காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.

மதுரை மாவட்டம் மேலூரில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து தலைக்கவசம் அணியமால் வந்த நபர்களை ஒன்றாக நிற்க வைத்து அவர்களின் கைகளில் கோழி முட்டை கொடுத்த அவர்கள், தலை கவசம் அணியாமல் கீழே விழுந்தால் முட்டை தவறி விழுந்து உடைவது போல பாதிப்பு ஏற்படும் என்று நூதன முறையில் அறிவுரை வழங்கினர்.

Exit mobile version