மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாப்படுகை சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி, திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இதனிடையே அவர் தனது வீட்டில் இருந்த கொடி கம்பத்தில் துணி காய வைக்கும் பொழுது, அருகில் இருந்த மின்கம்பத்தில் ஈரத்துணி பட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது மின்சாரம் தாக்கிய தந்தையை காப்பாற்ற சென்ற அவரது மகன் பிரதீப்பும் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version