தீயவர்களின் கைகளில் நாடும், மாநிலமும் சிக்காமல் காப்பாற்றப்பட்டு இருக்கிறது: ராமதாஸ்

தீயவர்களின் கைகளில் நாடும் மாநிலமும் சிக்காமல் காப்பாற்றப்பட்டு இருப்பதே, ஒருவகையில் நமக்கு கிடைத்த வெற்றி என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதே தவிர, தனக்கு எந்தவித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்கின்றன என்று சுட்டிக் காட்டியுள்ள ராமதாஸ், இதன்மூலம் தீயவர்களின் கைகளில் நாடும், மாநிலமும் சிக்காமல் காப்பாற்றப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது நமக்கு கிடைத்த வெற்றி தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளர்.

பொய்களின் துணையுடன் கட்டமைக்கப்பட்ட மாய வளையத்தில் மக்கள் கொண்டு வந்து அவர்களின் வாக்குகளை திமுக வழிப்பறி செய்துள்ளது என்று சாடியுள்ள ராமதாஸ், இது அவர்களுக்கு தற்காலிகமான வெற்றியே என்றும் கூறியுள்ளார். மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது தங்களை மட்டுமே வளப்படுத்திக் கொண்டு, மக்களுக்காக எதையும் செய்யாத திமுக, இப்போது எந்த அதிகாரமும் இல்லாத சூழலில் எதை சாதிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version