அவதூறாக பேசிவரும் ஸ்டாலினுக்கு நாக்கில் சனி பிடித்துள்ளது: ராமதாஸ்

முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தன்னை பற்றி அவதூறாக ஸ்டாலின் பேசிவருவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

தர்மபுரி மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அரூர் சட்டமன்ற தனித்தொகுதி அதிமுக வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து அரூர் ரவுண்டானாவில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதில் பேசிய மருத்துவ ராமதாஸ், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் என்னை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசிவரும் ஸ்டாலினுக்கு நாக்கில் சனி பிடித்திருப்பதாக கூறினார். மேலும், இந்த மக்களவை தேர்தலோடு திமுக முடிவுக்கு வந்துவிடும் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

Exit mobile version