மக்களவை தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.

சென்னை பாண்டிபஜாரில் பாமக சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். வலிமையான இந்தியா, தன்னிறைவு பெற்ற தமிழகம் மற்றும் ஒளிமயமான எதிர்காலம் அமைக்க பாடுபடுவோம் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழகத்தை படைப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்தங்கிய பகுதிகளில் முன்னேற்றம், உள்ளாட்சி – கிராமப்புற வளர்ச்சி, தமிழ் ஆட்சிமொழி, கச்சத்தீவு மீட்பு, வெளிநாடுவாழ் தமிழர் நலன், தமிழர்கள் விடுதலை ஆகியவை குறித்தும் பாமகவின் தேர்தல் அறிக்கையில் உறுதி கூறப்பட்டுள்ளது. பாமக கட்சித்தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Exit mobile version