News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

அனைத்து பிரச்சனைகள் மீது விவாதம் நடத்த தயார்: பிரதமர் மோடி

Web Team by Web Team
January 31, 2020
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
அனைத்து பிரச்சனைகள் மீது விவாதம் நடத்த தயார்: பிரதமர் மோடி
Share on FacebookShare on Twitter

பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்தழைப்பு தருமாறு வலியுறுத்திய பிரதமர் மோடி, அனைத்து பிரச்சனைகள் மீது விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

2020-2021ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி, இன்று முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனிடையே, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

அப்போது பேசிய மோடி, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்தழைப்பு தருமாறு அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் கேட்டுக் கொண்டார். மேலும், எதிர்கட்சிகளின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறிய பிரதமர், அனைத்து பிரச்சனைகள் மீது விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், மாநிலங்களவையின் அனைத்துக் கட்சிக் கூட்டம், குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் இன்று நடைபெறுகிறது.

இதே போல், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தும் வகையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளின் பிரதிந்திகளும் கலந்துக் கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்தழைப்பு தருமாறு அனைத்துக் கட்சி பிரநிதிகளிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

Tags: பிரதமர் மோடிமத்திய பட்ஜெட்
Previous Post

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது

Next Post

ஜெயக்குமார் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம்: சிபிசிஐடி

Related Posts

தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக  பதவியேற்ற  நிதிஷ் குமார்!
TopNews

தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்!

November 16, 2020
உலகின் மிக நீளமான  சுரங்கப்பாதை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
TopNews

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

October 3, 2020
அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு!
TopNews

அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு!

October 2, 2020
கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? – பிரதமர் மோடி கேள்வி
TopNews

கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? – பிரதமர் மோடி கேள்வி

September 26, 2020
இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்
TopNews

இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

September 26, 2020
சென்னையில் அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை அமைக்கவேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
TopNews

சென்னையில் அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை அமைக்கவேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

September 25, 2020
Next Post
ஜெயக்குமார் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம்: சிபிசிஐடி

ஜெயக்குமார் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம்: சிபிசிஐடி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version