தனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு: பாமக வேட்பாளர் வரவேற்பு

தனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்த திமுகவினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பால் தெரிவித்துள்ளார்.

மத்திய சென்னை, நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சாம் பால், சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவில் அருகில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார். திருவல்லிகேணி, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில், பிரசாரம் மேற்கொண்ட சாம்பாலுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

பிரசாரத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுகவினர் தேர்தல் சமயத்தில் மட்டும் தான் பள்ளிவாசல், கோவில், கிறிஸ்துவ ஆலயங்களுக்கு சென்று கீழ்தரமான அரசியல் செய்து வருவதாக கூறினார்.

Exit mobile version