பெருஞ்சாணி அணை முழு கொள்ளவை எட்டி இருப்பதால் உபரி நீர் வெளியேற்றம்

கேரளா, கர்நாடக மற்றும்  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி அணை தனது முழு கொள்ளவான 77 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து  அணையில் இருந்து ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதனால் தாமிரபரணி , பரளியாறு கரைகளான மூவாற்றுமுகம், சிதறால், தீக்குறிச்சி, மங்காடு, பரக்காணி உள்ளிட்ட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
Exit mobile version