19,427 ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் உள்ள 19 ஆயிரத்து 427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது, 19 ஆயிரத்து 427 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version