தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள்,சென்னை திரும்பினர்

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், சென்னை திரும்பி வருகின்றனர். அவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களின்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் கடந்த வாரம் புனிதவெள்ளி, மக்களவை தேர்தல் சித்ரா பௌர்ணமி என தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு சுமார் 7 லட்சம் பயணிகள் சென்னையில் இருந்து சென்றுள்ளனர். விடுமுறை முடிந்த நிலையில், பயணிகள் சென்னைக்கு சிரமமின்றி திரும்பும் வகையில் எப்பொழுதும் இயக்கப்படும் 2275 பேருந்துகள் மட்டுமில்லாமல் கூடுதலாக 1200 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இரவு முழுவதும் பயணிகள் சிரமமின்றி பயணிக்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பயணிகளின் பாதுகாப்புகாக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். இதனால் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்கள் சிரமம் இன்றி பயணிக்க முடிந்தது.

Exit mobile version