அண்ணா நினைவுத்தினம்: சிலை-உருவ படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், உருவ படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சார் ஆட்சியர் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version