அதிகாரத்தில் இல்லாமல் மக்களிடம் மனுக்களை வாங்கி ஸ்டாலின் அரசியல் நாடகம் ஆடுகிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விக்கிரவாண்டி தொகுதியின் காணை பகுதியில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது பேசிய அவர், வாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்களைச் சொல்லி மக்கள் ஏமாற்றும் திமுகவிற்கு, இந்த தேர்தலில் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என கூறினார். இந்த பிரசாரத்தின் போது சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உடன் இருந்தார்.
Discussion about this post