சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு சரமாரி அடி

திருச்சியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை பிடித்து பெற்றோர்கள் அடித்து உடைத்த காட்சி சமூக வலைதலங்களில் வைரலாக பரவிவருகிறது.திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சில நாட்களாக பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், மேலும் ,பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த பெற்றோர்கள் சிலர் அந்த இளைஞரை பிடித்து கட்டிவைத்து சரமாரியாக அடித்து உடைத்து அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதவியேற்றியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version