திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: அவனியாபுரத்தில் துணை ராணுவம் அணிவகுப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

திருப்பரங்குன்றத்தில் வரும் 19ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் 295 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், 88 சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் பதற்றமின்றி வாக்களிக்கும் வகையில், அவனியாபுரத்தில் 150க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

அவனியாபுரம் காவல் ஆய்வாளர் இளவரசு தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் துவங்கி பிரசன்னா காலனி உள்ளிட்ட பகுதிகள் வழியாக வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வரை நடத்தப்பட்டது.

Exit mobile version