ஏப்ரல் 1 லிருந்து பான் கார்டு செயலற்றதாகிவிடும்!

ஆதார் எண்ணுடன் பான் கார்டினை இணைக்காவிட்டால் ஏப்ரல் 1 ஆம் தேதிமுதல் பான்கார்டு செயலற்றதாகிவிடும் என்று மத்திய வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. வருமான வரிச்சட்டம் 1961ன் கீழ் பான்கார்டு வைத்துள்ள அனைவரும் வருகின்ற மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் என்று மத்திய வரிகள் வாரியம் [சிபிடிடி] தெரிவித்துள்ளது. அப்படி பான் கார்டினை இணைக்காமல் விட்டால் அது காலாவதியாகிவிடும் பட்சத்தில் ஒரு நபர் அதனை பயன்படுத்தி வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய முடியாது.

 

Exit mobile version