முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளன. இதனால், அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டி உள்ளது. இதனால், நள்ளிரவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது. அணையில் இருந்து 4 ஆயிரத்து 489 கனஅடி நீர் திறக்க இருப்பதால் இடுக்கி மாவட்ட ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version