கிளைச் செயலாளர் பதவி ஒரு கோடி ரூபாய் – தலைமைக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ள தொண்டர்

தி.மு.க.-வில் கிளைச் செயலாளர் பதவி ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போவதாக, அக்கட்சியினரே அதிருப்தி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில், தி.மு.க. தலைமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அக்கட்சியினர் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில், தி.மு.க.-வில் கிளைச் செயலாளர் பதவிக்கு ஒரு கோடி ரூபாய் இருந்தால் தான் வர முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை கட்சி தலைமைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், போஸ்டரில் பாதிக்கப்பட்ட – பாவப்பட்ட கழகத் தொண்டர்கள் என்றும் வாசகமும் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர்களை பார்க்கும் மக்கள், கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் பிரச்னையை கவனிக்காத ஸ்டாலின், மக்களின் பிரச்னை எப்படி கவனிப்பார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Exit mobile version