கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை, துடியலூரை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த மார்ச் 25ம் தேதி காணாமல் போனார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை தேடிவந்த நிலையில் 26ம் தேதியன்று வீட்டின் அருகிலேயே அவரது சடலம் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.

இந்த கொலை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசராணை நடைபெற்று வந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், சிறுமி கொலை தொடர்பாக 6 நாட்களுக்கு பிறகு தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Exit mobile version