உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் மெகா மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கென்யா வீரர் முதலிடம் பெற்றார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி இரண்டாம் ஆண்டாக மெகா மாரத்தான் 2019 ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 1 கிலோ மீட்டர் என நான்கு பிரிவுகளாக ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. ஆடவர், மகளிர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் கேரளா, கர்நாடக மற்றும் கென்யாவைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். 21 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தில் கென்யாவைச் சேர்ந்த இசான்ஜெமூய் முதலிடத்தையும், மற்றொரு கென்யா வீரரான பென்ஜமின் 2 ஆம் இடத்தையும், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெகதீசன் 3 ஆம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Discussion about this post