இலங்கை தமிழர்கள் கொலை: மக்களை ஏமாற்றவே கருணாநிதி உண்ணாவிரத நாடகம்- ஓ.பன்னீர்செல்வம்

இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களை காக்க முயற்சி எடுக்காமல், மக்களை ஏமாற்ற கருணாநிதி உண்ணாவிரத நாடகமாடினார் என்று, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த சிறப்பான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தாலிக்கு தங்கம், கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் தொகை உள்ளிட்டவைகளை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உயர்த்தி வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில், சர்வாதிகாரி ராஜபக்ச, தமிழர்களை படுகொலை செய்தபோது, அப்போதை மத்திய, மாநில அரசுகள் அவருக்கு ஆதரவாகவே செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version