2,000 ரூபாய் நிதி உதவி திட்டத்திற்கு தடை வாங்கியது திமுக: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான 2 ஆயிரம் நிதி உதவி திட்டத்திற்கு நீதிமன்றம் சென்று தடை வாங்கியது திமுக தான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி உள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து மதுரை சிலைமான் பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். கூடியிருந்த தொண்டர்கள், பொதுமக்களிடையே உரையாற்றிய துணை முதலமைச்சர், தமிழக அரசின் நலத் திட்டங்களை முடக்க திமுக முயற்சித்து வருவதாக கண்டனம் தெரிவித்தார்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி திட்டத்திற்கு நீதிமன்றம் சென்று தடை வாங்கியது திமுக என்று அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் முடிந்ததும் நிதியுதவி நிச்சயம் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

Exit mobile version