நகைகளை கொள்ளை அடித்து விட்டு தலைமறைவான வட மாநில இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நகைகளை கொள்ளை அடித்து விட்டு தலைமறைவான வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.

வாணியம்பாடியில் நகை கடை நடத்தி வருபவர் சந்தோஷ் சந்த். இவரிடம் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஷேக் சதாம் உசேன் என்பவர் பணியாற்றி வந்தார். நகை பட்டறையில் நகைகளை பராமரித்து வந்த இவர் சுமார் 80 சவரன் நகையுடன் கடந்த மாதம் 1ஆம் தேதி மாயமானார். சந்தோஷ் சந்த கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மேற்கு வங்கத்தில் பதுங்கி இருந்த சதாம் உசேனை கைது செய்தனர். கொள்ளை அடித்த நகைகளை அவர் உருக்கி தங்க கட்டிகளாக வைத்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிபதி முன்று ஆஜர்படுத்தப்பட்ட சதாம் உசேன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version