காஞ்சிபுரம் மாவட்டத்தில் கத்தி முனையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை, இரவு நேரங்களில் செயின் பறிப்பு, பணம் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத சக்திகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும், பதற்றமும் உருவாகியுள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சமூக விரோத சக்திகளின் நடவடிக்கையினை ஒழித்திட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சருக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம், விசாலாட்சி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று கூறியுள்ள அவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதிய அளவில் காவல்துறையினர் எண்ணிக்கை இல்லாததும், ரோந்து நடவடிக்கைகள் குறைந்துள்ளதும் இச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே சட்டம் ஒழுங்கை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை — மா.கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
-
By Web team

- Categories: அரசியல், தமிழ்நாடு
- Tags: Balakrishnancommunist partykanchipuramwomen safety
Related Content
நாம நல்லா இருந்தா ஹாஸ்பிடல் போவோம்! ஹாஸ்ப்பிடலே நல்லா இல்லனா எங்க போறது?
By
Web team
August 2, 2023
செவிலியர்கள் அலட்சியம்! கழிவறையில் பிரசவம் ஏற்பட்டு கழிவறைத் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தை!
By
Web team
July 21, 2023
விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - எதிர்க்கட்சித் தலைவர்!
By
Web team
March 8, 2023
ரூ.20 கோடியில் மகளுக்கு திருமணம் நடத்திய திமுக ஒன்றிய கழக செயலாளர் !
By
Web team
February 15, 2023
தொழிற்சாலைக் கழிவுகளை தீயிட்டு எரிக்கும் மர்ம நபர்கள் !
By
Web team
February 11, 2023